பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கான திகதி இம்மாதம் எட்டாம் திகதி கட்சித் தலைவர்களின் மாநாட்டில் எடுக்கப்படும் என்று அரசு இன்று அறிவித்தது.
மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே இதனைத் தெரிவித்தார்.
குற்றப் பிரேரணை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும் கூட பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீங்குவாரா இல்லையா என்ற தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பார் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், இது தொடர்பிலான நாடாளுமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவார் என்று நாம் நம்பவில்லை என்றும் அமைச்சர் நிமல் கூறினார்