Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்தியாவுடன் சீபா உடன்படிக்கையை செய்து கொள்ள சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு!

இந்தியாவுடன் சீபா உடன்படிக்கையை செய்து கொள்ள சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு!

 

இந்தியாவுடன் சீபா உடன்படிக்கையை செய்து கொள்ள விரும்பவில்லை என இந்திய அதிகாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதேவேளை, 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறையில் உள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் புதிய விடயங்களை இணைத்துக் கொள்வது குறித்து ஆலோசனை செய்யத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

இந்தியாவுடன் சீபா உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் புதுடில்லிக்கு விஜயம் செய்திருந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்திருந்திருந்தார்.

ஆனால், இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவுடன் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் எதுவும் பேசவில்லை.

சீபா உடன்படிக்கை தொடர்பில் தவறான கருத்துக்களை இலங்கையிலுள்ள சில வர்த்தகத் தரபபினர் பரப்பி வருவதாக இந்திய வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் கருதுகின்றனர்.

2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான சீபா உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

இது தொடர்பில் 2008ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை இவ்விரு நாடுகளுக்கும் இடையில் 13 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், இந்த உடன்படிக்கை இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8/24/2012 3:28:17 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்