Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மலேசியாவுக்கான தூதுவரை சிறிலங்கா திருப்பி அழைப்பு! - ஏற்க மறுத்தார் நந்தா கொடகே!!

மலேசியாவுக்கான தூதுவரை சிறிலங்கா திருப்பி அழைப்பு! - ஏற்க மறுத்தார் நந்தா கொடகே!!

 

மலேசியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் நந்தா கொடகே தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னரேயே சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று, அவர் தொடர்பில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் படைத்துறை அமைச்சு ஆகியவற்றுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே அவர் இவ்வாறு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மலேசியாவில் இயங்கி வரும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்டு வரும் பரப்புரைகளை இவர் முறியடிக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உத்தரவை ஏற்க மறுத்துள்ள நந்தா கொடகே, பதவிக்காலம் முடியும் வரை தான் மலேசியாவுக்கான தூதுவராக தொடர்ந்து  பணியாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவுக்கான தூதுவராக அவர் மலேசியாவில் தொடர்ந்தும் பணி புதிந்தால், அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு தயாராகி வருவதாக தெரிய வருகின்றது' என இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

8/7/2012 2:27:54 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்