தமிழீழத் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டியில் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் ஏலவே யூன் 26ம் நாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் அதற்கு சமாந்தரமாக அதேநாளில் புலம்பெயர் நாடுகளிலும் இக்கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இக்கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
அமெரிக்கா
நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்னால் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.
பிரித்தானியா:
பிரித்தானியப் பிரமதர் டேவிட் கமறூன் அவர்களது அதிகாரபூர்வ இல்லத்திற்கு முன்பாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது. பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்ததோடு தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்திருந்தனர்.
பிரான்ஸ்:
ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களில் ஒன்றான நோக்கி, கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்ததோடு அதிகாரிகளிடம் மனுவும் கையளிக்கப்பட்டது.
கனடா:
தமிழர் தாயகத்தில் இருந்து சிறிலங்காவே வெளியேறு என்ற முழக்கத்துடன், நில அபகரிப்பிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமாக, ரொறன்ரோவில் உள்ள சிறிலங்காவின் உயர்காரியாலயத்திற்கு முன்னால் போராட்டம் இடம்பெற்றது.
ஜேர்மனி
பொன் நகரில் உள்ள ஐ.நாவின் காரியாலயத்திற்கு முன்னர் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
தாயகப் போராட்டங்களுக்கு சமாந்தரமாக இவ்வாறான போராட்டங்கள் தொடர்சியாக முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.