Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்தியாவின் பிரச்சினையை தீர்த்து வைத்த மகிந்தவுக்கு உயர் விருது வழங்க வேண்டும்! - சுப்பிரமணிய சுவாமி

இந்தியாவின் பிரச்சினையை தீர்த்து வைத்த மகிந்தவுக்கு உயர் விருது வழங்க வேண்டும்! - சுப்பிரமணிய சுவாமி

 

இலங்கையின் பிரச்சினையை மட்டுமன்றி, இந்தியாவின் பிரச்சினையையும் தீர்த்து வைத்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியா உயர் விருது வழங்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைத்தரப்பின் படைத்துறைக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்குச் சென்றுள்ள சுப்பிரமணிய சுவாமி அலரி மாளிகையில் நேற்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தீவிரவாதத்துக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் பெற்ற வெற்றி 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி எனவும்,  இதன் மூலம் இலங்கையின் பிரச்சினையை மட்டுமன்றி, இந்தியாவின் பிரச்சினையையும் தீர்த்து வைத்துள்ளதாக மகிந்த ராஜபக்சவுக்கு சுப்பிரமணிய சுவாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

இச்சந்திப்பில் சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சரும், ஈ.பி.டி.பி.யின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் சுப்பிரமணிய சுவாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவரும் சுப்பிரமணிய சுவாமி, கொழும்பு கலதாரி விடுதியில் இடம்பெற்று வரும் படைத்துறைக் கருத்தரங்கில் இன்று உரையாற்றவுள்ளமை தெரிந்ததே.

8/10/2012 2:44:40 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

samy neeyo oru komali. en unakku intha velai.nee oru visar. better go mental hospital
john, canada srilanka
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்