முனைவர் த.செயராமன் எழுதிய 'ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்' எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 07ஆம் திகதி சனிக்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ளது.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவையில் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரச அலுவலர் ஒன்றியத்தில் மாலை 05 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் கவிஞர் கவிபாஸ்கரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வுக்கு தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை தலைமை தாங்கவுள்ளார்.
இந்நூல் வெளியீட்டுக்கான சிறப்புரையை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வழங்க, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு மற்றும் இயக்குநர் கௌதமன் ஆகியோர் கருத்துரைகளை வழங்குகின்றனர்.
இந்நிகழ்வின் இறுதியில் ஏற்புரையை முனைவர் த.செயராமனும், நன்றியுரையை கவிஞர் முழுநிலவனும் வழங்கவுள்ளனர்.