Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநாடு நாளை ஆரம்பம்! - ஈழப்பெண்கள் மீதான கொடுமைகள் குறித்தும் விவாதம்!!

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநாடு நாளை ஆரம்பம்! - ஈழப்பெண்கள் மீதான கொடுமைகள் குறித்தும் விவாதம்!!

 

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது  கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விவாதிக்கும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை ஆரம்பமாகின்றது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்களை எதிர்த்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19வது அகில இந்திய மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாராவ் மஹாலில் நடைபெறுகிறது.

நாளை முதல் 11ஆம் திகதி வரை தொடர்ந்து 04 நாட்கள் நடைபெறவுள்ள இம் மாநாட்டை எங்கள் அமைப்பின் அகில இந்திய தலைவர் அருணா ராய் ஆரம்பித்து வைக்கின்றார். இத் மாநாட்டில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் சமுதாயத்தில் பெண்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள், பொது நவீன கொள்கை, கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், 33 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் இரண்டாவது நாள் இலங்கையில் இடம்பெற்ற போரின் போது  கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல் ஆகியவை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

8/7/2012 3:56:42 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்