ஐவின்ட் ஸ்கைய (தமிழில்: ரூபன் சிவராஜா)
சுடர் ஏற்றுங்கள்!
ஒரு சுடர் எரியட்டும்
இந்த சிறிய பூமிக்கு,
நாம் வாழும் இந்த
அகன்ற வானத்து நட்சத்திர வெளியில்
நல்லன சித்திக்க வேண்டி
நம்பிக்கையை
எல்லோரும் பகிர்வோம்
பூமியும் வானமும்
சங்கமிக்க வேண்டும்.
அதற்காகவே
ஒருசுடர் ஏற்றப்பட்டுள்ளது.
சுடர் ஏற்றுங்கள்!
இரு சுடர் ஒளிரட்டும்
காதலுக்கும் நம்பிக்கைக்குமாக,
மானிடத்தின் பால்
பரிவு கொண்டவர்க்காகவும்,
எப்பொழுதும் உறவுப்பாலம்
அமைப்பவர்க்காகவும்!
கைதிகள்
விடுதலை அடையவும்
இருப்பிழந்தோர்
வீடுகளைப் பெறவும்,
அழுபவர்களுக்காகவும்
அவர்களை
ஆற்றுப்படுத்துவோருக்காகவும்
சுடரினை ஏற்றுங்கள்.
சுடர் ஏற்றுங்கள்!
மூன்று சுடர்
சுவாலை விட்டெரியட்டும்
சரிநிகர் வாழ்வுக்காக,
நீதிக்கும் விடுதலைக்கும்
போராடியவர்களுக்காக...
எல்லா மக்களும் ஒன்றுபடும் வரை
எவருமே உறுதி தளரலாகாது
சுடரினை ஏற்றுங்கள
விடுதலைக்கும்,
உரிமைக்கும்
போராடியவர்களுக்காக!
*மூலம்: நோர்வேஜிய எழுத்தாளரும் கவிஞருமான ஐவின்ட் ஸ்கைய (Eyvind Skeie)